வஞ்சிர மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

வஞ்சிர மீன் - முக்கால் கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
தக்காளி - இரண்டு
ப. மிளகாய் - ஐந்து
புளி - பெரிய எலுமிச்சையளவு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
சீரகம் - கால் டீ ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - நான்கு டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
அரைக்க:
வர மிளகாய் - ஏழு
மல்லி விதை - ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்

செய்முறை

முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டங்களாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்கவும்.
வர மிளகாய், மல்லி, சோம்பு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்கவும்.
ப. மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். தனியாக பிளக்க வேண்டாம்.
புளியை மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரைத்த விழுதையும் போட்டு கரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து வெந்தயம் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்கவும்.
பின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின் மீன் துண்டங்களைப் போட்டு (மீனை போட்டவுடன் குழம்பு லேசாக நீர்த்துக் கொள்ளும்) ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து லேசாக (மீன் உடைந்து விடாமல் கவனமாக) கிண்டி விடவும்.

பரிமாறும் அளவு - ஐந்து நபர்களுக்கு
ஆயத்த நேரம் - பத்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - முப்பது நிமிடங்கள்

0 comments: