இறால் குழம்பு

தேவையான பொருட்கள்

இறால் - அரை கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன்
எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டீ ஸ்பூன்

செய்முறை
இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
தேங்காய் & சீரகத்தை அரைக்கவும்.
சோம்பை நன்றாக தட்டி வைக்கவும்.
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.
இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்றவும்.
ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

பரிமாறும் அளவு - ஆறு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - இருபது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்

0 comments: